இடம்பெறவுள்ள பாராளுமன்றத் பொது தேர்தல் ஆனது வட கிழக்கிற்கு ஒரு முக்கியமான தேர்தலாக காணப்படுகின்றது மட்டக்களப்பு மாவட்டத்திலே பல சுயேட்சை குழுக்கள் இம்முறை களமிறங்கப்பட்டுள்ளது இவர்கள் பல ஆயிரக் கணக்கான நிதிகளை செலவிட்டு அரசியல் செய்கின்றனர் இது யாருக்காக இதில் பல சுயேட்சை குழுக்கள் தமிழர்களின் வாக்குகளை பிரித்து மாற்றினத்த வருக்கு ஆசனங்களைப் பெற வேண்டும் என்ற காரணத்தினால் திட்டமிட்டு இறக்கப்பட்டுள்ளன
மட்டக்களப்பு மாவட்டத்திலேயே வரலாற்றில் ஒரு தேசியக் கட்சியில் முதல் முறையாக ஒரு சிங்கள இனத்தவர் களமிறக்கப்பட்டுள்ளார் இதன் பின்னணிகளை நோக்கும் போது சுயேச்சைகள் தாங்கள் வாக்கெடுக் காவிட்டாலும் பரவாயில்லை தமிழினத்திற்கு துரோகம் இழைப்பதற்காகவே அவர்கள் இம்முறை போட்டியிடுகின்றார்கள் மாவட்டத்தில் உள்ள மக்கள் எமது கட்சிக்கு பூரண ஆதரவினை தந்து இம்முறை தேர்தலில் நாங்கள் அனைவரும் இணைந்து காப்பாற்ற வேண்டுமென முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரன் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளர் அறிமுக விழாவில் இவ்வாறு கருத்து தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்ட நிருபர்
ந.குகதர்சன்