ஈரோடு மாவட்டம் சத்தியமங்லத்தில் 100 சதவீத பேருந்துகள் இயக்கம்

Date: 2024-01-09
news-banner
ஈரோடு மாவட்டம் சத்தியமங்லத்தில் 100 சதவீத பேருந்துகள் இயக்கம்
           சத்தியமங்கலத்தில் இருந்து கர்நாடகா மாநிலம் மைசூர், கொள்ளேகாலுக்கு தமிழக அரசு பேருந்துகள் இயக்கம்
சத்தியமங்கலத்தில் அண்ணா தொழிற்சங்கம் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த போதிலும் விடுமுறையில் இருந்த பிற பணியாளர்கள் பணிக்கு வந்ததால் சத்தியமங்கலத்தில் 100 சதவீத அரசு பேருந்துகள் இயங்கின.  
        போக்குவரத்து தொழிலாளர்களுடன் அரசு நடத்திய முத்தரப்பு பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததையடுத்து அண்ணா தொழிற்சங்கம் மற்றும் கூட்டமைப்பு  தொழிற்சங்கத்தினர் 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று  போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன் ஒரு பகுதியாக  சத்தியமங்கலத்திலும் தொழிலாளர்கள்  வேலை நிறுத்தப் போராட்ட்தில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் சத்தியமங்கலத்தில் அனைத்து பேருந்துகள் வழக்கம் போல இயக்கப்பட்டன. தொமுகவைச் சேர்ந்த தொழிலாளர்கள்  விடுமுறையில் இருந்த போதிலும் அவர்கள் பணிக்கு வந்ததால் சத்தியமங்கலம் அரசு போக்குவரத்து பணிமனையில் இருந்து 57 புறநகர் பேருந்துகளும் 25 நகர்ப்பேருந்துகளும் வழக்கம்போல  இயக்கப்பட்டன. தமிழகத்தில் கர்நாடகத்துக்கு செல்லும் தமிழகஅரசு பேருநதுகள் காலை 5.35 மணிக்கு கர்நாடகா மாநிலம் மைசூருக்கு, கொள்ளேகாலும் புறப்பட்டு சென்றன.கர்நாடகத்தில் இருந்து வரும்  கர்நாடக அரசு பேருந்துகள் சத்தியமங்கலம் வந்து சென்றன. அரசு பேருந்துகள் இயக்கப்பட்டதால் தனியார் பேருந்துகளில் பயணிகள் கூட்டம் குறைந்துளவே காணப்பட்டது.

image

Leave Your Comments