பவானிசாகர் அருகே ஊருக் குள் நடமாடிய கரடி- கிராம மக்கள் அச்சம்

Date: 2024-01-09
news-banner
பவானிசாகர் அருகே ஊருக் குள் நடமாடிய கரடி- கிராம மக்கள் அச்சம்
          சத்தியமங்கலம் புலிகள் காப்பக பகுதியில் 10 வன சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரக வனப்பகுதியில், புலி, சிறுத்தை, யானை, கரடி, மான், காட்டெ ருமை உள்ளிட்ட பல்வேறு வகையான வனவிலங்குகள் வசிக்கின்றன. இந்த வனவிலங்குகள்அவ்வப்போது, வனப்பகுதியை விட்டு வெளி யேறி,
குடியிருப்பு பகுதியில்  நடமாடுவது வழக்கம்..இந்த நிலையில், சனிக்கிழமை அன்று,
பவானிசாகர் அருகே உள்ள வெள்ளாள பாளையம் பிரிவு சாலையில், நள்ளிரவில்,
விளாமுண்டி வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒரு கரடி நடமாடி உள்ளது. ஊருக்குள் புகுந்து வந்து சாலையில் கரடி நடமாடிய காட்சி, 
அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த வீடியோ தற்போது,சமூக வலை தளங்
களில் வைரலாகி  வருகிறது. கரடி நடமாட்டம் காரணமாக, வெள்ளாளபாளையம் கிராம பகுதி பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

image

Leave Your Comments