கோபிச்செட்டிபாளத்தில் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் நடைபெற்ற தேங்காய் ஏலம் .

Date: 2023-12-31
news-banner
gobichettipalayamகோபிச்செட்டிபாளத்தில் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் நடைபெற்ற தேங்காய் ஏலம் 
              கோபிசெட்டிபாளையம் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை தேங்காய் ஏலம் நடை பெற்று வருகிறது கோபியை சுற்றியுள்ள விவசாயிகள் தங்களுடைய தேங்காய்க்கு நல்ல விலை கிடைக்க வேண்டும் என்பதற்காக கோபி கூட்டுறவு விற்பனை சங்கத்தில் நடைபெறும் ஏலத்தில் கொண்டு வந்து விற்பனைக்கு வைத்துள்ளனர் இந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் மொத்தம் 12000 தேங்காய்கள் விவசாயிகளால் கொண்டுவரப்பட்டன தேங்காய்எட்டு ரூபாயிலிருந்து பதினாறு ரூபாய் வரை விலை போனது மார்கழி மாதம் என்பதால் பல்வேறு கோவில்கள் திருவிழாக்கள் நடைபெறுவதால் விவசாயிகளுக்கு தேங்காய்க்கு நல்ல விலை கிடைத்துள்ளது பொது மேலாளர் திரு சோமசுந்தரம் மேலாளர் திரு சுரேஷ்  கண்காணிப்பாளர் சரவணன் ஆகியோர் முன்னிலையில் ஏலம் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

image

Leave Your Comments