திருமதி நேசமலர் நவரத்தினராஜா அவர்களின் துயர் பகிர்வுகள் ...

Date: 2023-12-27
news-banner
துயர் பகிர்கின்றோம் 
திருகோணமலையை பிறப்பாடமாகவும், இந்தியா சத்தியமங்கலம் பவானிசாகர் இலங்கை தமிழர் முகாமை வதிவிடமாகவும் கொண்ட திருமதி. நேசமலர் நவரத்தினராஜா அவர்கள் 27-12-2023 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.  அன்னார் மாணிக்கம் - ராசம்மா தம்பதிகளின் அன்பு புதல்வியும், பொன்னுத்துரை - அன்னம்மாள் தம்பதிகளின் அன்பு மருமகளும், 
நவரத்தினராஜா அவர்களின் அன்பு மனைவியும், ரஞ்சினி அவர்களின் பாசமிகு தாயாரும் , சரஸ்வதி, கலைமகள் ஆகியோரின் அன்பு சகோதரியும், சிவபாலசுந்தரம், கோவிந்தராஜன், சிவதாசன், நாராயணதேவி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,  பிருந்தா, ஜனார்த்தனன் ஆகியோரின் பாசமிகு பாட்டியும், வி.கானா  - ன் பூட்டியும் ஆவர். 

அன்னாரின் பூதவுலனது 28-12-2023 அன்று (நாளை) காலை 11.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் இருந்து நல்லடக்கத்துக்காக பகுடுதுறை இந்து மயானத்துக்கு எடுத்துச்செல்லப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றார்கள்.

தகவல் : குடும்பத்தினர்.
image

Leave Your Comments