பாரிய கொள்ள சம்பவத்தில் ஈடுபட்ட இவர்களை கண்டால் உடனடியாக அறியத்தருமாறு பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்

Date: 2024-11-26
news-banner
சிறு மாற்றம் வவுனியா பொலிஸாரின் அவசர வேண்டுகோள் 
        கடந்த சில நாட்களுக்கு முன் மினுவாங்கொடை பகுதியில் 7கோடி பெறுமதியான பாரிய கொள்ள சம்பவத்தில் ஈடுபட்டதாக அடையாளம் காணப்பட்டுள்ள சீதுவ பகுதியை சேர்ந்த பிரேசுமனி துஷார இந்திக்க சொய்சா என்பவர்  மற்றும் உடுகம்பொல பகுதியை சேர்ந்த w.a.d சமன் ரணசிங்க எனப்படுபவரையும் பொலிஸார் தேடிவரும் நிலையில் குறித்த இருவரும் தற்சமயம் வவுனியா மற்றும் வடமாகண பிரதேசங்களில் நடமாடிவருவதாக கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் பொலிஸார் பொதுமக்களின் ஆதரவை வேண்டி நிற்கின்றனர் 

குறித்த நபர்களை பொதுமக்கள் யாரும் அடையாளம் கண்டால் வவுனியா மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரியான சிரேஷ்ட பொலிஸ் பரிசோதகர் அழகியவண்ண அவர்களின் தொலைபேசி இலக்கமான 0718596422 ஊடாக அல்லது 0716360020 (சிந்தக்க) ஆகிய தொடர்பிலக்கங்களுக்கு தொடர்பு கொண்டு அறியத்தருமாறு பொதுமக்களிடம் பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்
image

Leave Your Comments